Posts

Showing posts from June, 2024

நீரோட்டமும் நினைவோட்டமும்

கொட்டும் ஷவரிலிந்து தோள்பட்டையில் சில்லென்று இறங்கிய நீர் கணுக்கால்கள் மற்றும் மணிக்கட்டுகள்  வழியாக சூடாக வெளியேறிக்கொண்டு இருந்ததை உணர்ந்தபோது தோன்றியது ஆராத்யா குறிப்பிட்டது இதுதானோ. அலுவலக நண்பர்களுடன் அவரைச் சந்திக்க சென்ற போது அவர் பேசியதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.  அந்த சந்திப்பு அவர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவார் என்பது பற்றி அறியத்தான். ஆனால் சூழலின் வலி எனது சிந்தையையும் முடக்கியிருந்தது.  "ஹேட் எ ஹாட் ஷவர் ?" ஒரு குறும்பு சிரிப்புடன்  கேட்டார். எதற்கு என்று புரியாமல் திரும்பி பார்த்தேன். "ஓ , கோல்ட் ஷவரா ?" ஆமாம் என்பதாய்த் தலையாட்டி வைத்தேன்.  அவரே தொடர்ந்தார். "விபத்துக்கு பின் நினைவு மீண்டதிலிருந்து, கழுத்துக்கு கீழ் எனக்கு ஹாட், கோல்ட் எல்லாமே ஒன்றுதான். மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு அற்றுவிட்டது. அதற்காக, உடலில் உள்ள திசுக்கள் அவற்றின் கடமைகளை ஆற்ற தவறுவதெல்லாம் இல்லை. உருவாகும், வளரும், உருவாக்கும், சிதையும்..  மூளையின்  எந்த பங்களிப்பும் இன்றி"  என் நினைவை மீட்டு நிகழ்தளத்தில் தளையிட்டேன்.  நீர் சீராகக் கொட்டிகொண்ட...

மெடிக்கல் ஆஃபீசர்

"ஆஃபீசர் னா அவர மாதிரி இருக்கனும். அவர் ஒன்னு சொன்னா அப்பீலே கிடையாது. புது பேட்ச் ஜாயின் பண்றப்போ ஒவ்வொருத்தரும் பேர், நம்பர்,  ஊர் மட்டும் 6 செகண்ட்ல சொல்லுவாங்க. ஒருமுறைதான் கேட்பார். பின்னால எத்தன வருஷம் கழிச்சு 400 அடி, 400 கஜம்னு கூட சொல்லலாம் தூரத்துல போனாலும் சரியாய் பேர் நம்பர் சொல்லி கூப்புடுவார். கண் அவ்ளோ ஷார்ப். மெமோரியும்தான். ஒவ்வொருத்தரோட 7 டிஜிட் நம்பரும் ஞாபகத்துல இருக்கும். எதுக்கு கூப்பிடறாரோ னு பயந்துட்டு வருவான். ப்ரோமோஷன் ஆயிடுச்சா னு கேட்பார். இல்லேனு சொன்னா ஸ்லிப் கொடுத்து இவர பாரும்பார். பாத்துட்டு ப்ரோமோஷன் லெட்டரோட வருவான்." அவர்  சொன்னார். இரண்டாண்டுகளுக்கு முன் அவருடைய சதாபிஷேகத்தில் பார்த்ததற்கு சற்று பூசினாற்போல இருந்தார். 60 கிலோ மீட்டர் கார் பயணம் கால்களை வீங்க செய்திருந்தது. பசுந்தயிரில் மெல்லிய ஆடை கட்டியது போல கண்கள் குழம்பி இருந்தன. பத்து அடி தள்ளி என்னவோ கிடக்க அதைச் சுற்றி எவையோ மொய்த்தன. கண்ணாடி அணிந்திருந்தும் என்னவென்று கண்டுணர இயலவில்லை. கருத்து எப்போதுமே வாய்ப்புள்ள எல்லாவற்றையும் இருக்கலாம் என்று சொல்லுமே தவிர ஒருநாளும் இதுதான் என...

முன்னுரையாடல்

இப்போ என்ன? திடீர்னு.. திடீர்னு எங்க.. மூனு நாளாவே, மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு.. ஓ...ஹோ...  பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் பாத்து inspire ஆகிட்டியோ.. ஹீ.. ஹீ.. இல்ல...! இருக்குமோ..? தெரியல.. definite ஆ இல்ல.. நமக்குன்னு ஒரு உலகம் இருக்கணும் ல. To keep our own madness alive.. ஓ.. ஓ....! இப்போ புடிச்சிட்டேன்.. ஆத்துகார்ட்ட  எந்த conversation ஆ இருந்தாலும் நீயே ஆரம்பிச்சு reply கு wait பண்ற.. அவருக்கு  ஆர்வமில்லை ன்னு உனக்கே ஒரு thought இருக்கு. அதான..? அதுவும் ஒன்னும் புதிசில்லயே. இன்னும் 10 நாள்ல.., salary க்ரெடிட் ஆச்சா.. 2L  transfer பண்ணு ன்னு அவரே initiate பண்ணுவாரே.. ம்...க்கூம்.. ரொம்ப நல்ல மதிப்பீடுதான் போ.. ஆசானோட கசகஸ்தான் experience அவர்கிட்ட share பண்ணப்போ அவரோட genuine பதட்டத்த கண்ணால பாத்தியே.. அவருக்கும் ஆசானுக்கும் என்ன சம்பந்தம்..? உன்னோட regards மேல அவருக்கு இருக்க மரியாதை அது. நீயே அதை நிறைய தடவ பாத்திருக்க. அவரே சொன்ன மாதிரி அவர் ஒரு simple person. இரு இரு.. என்ன ஓவரா போய்ட்டு இருக்கு. நாங்களாம் நாங்க ஹை regards வச்சிருந்த நபரோட எதாது ஒரு common whats...